பந்தை மட்டும் பார்த்து விளையாடுங்கள், பண்ட்க்கு பதிலடி கொடுத்த நடிகையை விளாசும் ரசிகர்கள் – முழுவிவரம்

RIshabh Pant Urvashi Rautela
- Advertisement -

இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் தனது மிகச்சிறந்த திறமைகளால் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு கடந்த 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் தடுமாறினாலும் சமீப காலங்களில் நல்ல வளர்ச்சி கண்டுள்ள இவர் ஜாம்பவான் எம்எஸ் தோனிக்கு பின் அவரைப்போலவே அதிரடியாக விளையாடும் நல்ல விக்கெட் கீப்பர் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள இவர் வருங்கால இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் வீரராக போற்றப்படுகிறார்.

இதுபோல் நட்சத்திர அந்தஸ்தைப் பெறும் வீரர்கள் நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் பேசப்படுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டேலாவுக்கு ரிஷப் பண்ட் தீவிர ரசிகர் என்றும் ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் கடந்த சில வருடங்களாகவே அரசல் புரசலாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதிலும் 2018இல் இந்த இருவரும் டேட்டிங் செய்வதாகவும் காதலிப்பதாகவும் செய்திகள் வந்தன.

- Advertisement -

16 – 17 மிஸ்ட்கால்:
இருப்பினும் நாளடைவில் இருவருக்கிடையே மனகசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் ஒருவருக்கொருவர் வாட்ஸ்அப் செயலியில் தங்களை பிளாக் செய்து கொண்டதாகவும் செய்திகள் வந்தன. அப்படி பிரேக் அப் ஆனபின் ஒருமுறை ரிஷப் பண்ட் தன்னை பார்ப்பதற்கு காத்திருந்ததாகவும் போனில் தனக்கு நிறைய மிஸ்ட்கால் கொடுத்ததாகவும் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ஊர்வசி தெரிவித்தது சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபற்றி பாலிவுட் ஹங்காமா தொலைக்காட்சியில் ரிஷப் பண்ட் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் அவர் பேசியது பின்வருமாறு.

“ஒருமுறை வாரணாசியில் நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது புதுடில்லியில் எனக்கு ஒரு நிகழ்ச்சி இருந்ததால் அதை முடித்துவிட்டு உடனடியாக விமானத்தை பிடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன்பின் புதுடில்லியில் நான் ஒருநாள் முழுக்க சூட்டிங்கில் இருந்தேன். சுமார் 10 மணி நேர படப்பிடிப்புக்குப் பின் நான் திரும்பிச் சென்றபோது அவசரமாக தயாராக வேண்டியிருந்தது. அப்போது மிஸ்டர் ஆர்பி அங்கே வந்து காத்திருந்து என்னை பார்க்க விரும்பினார். ஆனால் நான் சோர்வுடன் இருந்ததால் தூங்கிவிட்டேன். மேலும் அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டதையும் நான் கவனிக்கவில்லை”

- Advertisement -

“அதன்பின் தூங்கி எழுந்தபோது 16 – 17 மிஸ்டுகால் இருந்ததைப் பார்த்து நான் மிகவும் பரிதாப்பட்டேன். அந்த நாளில் எனக்காக காத்திருந்த ஒருவரை நான் பார்க்காமல் விட்டுவிட்டேன். மரியாதை நிமித்தமாக நிறைய பெண்கள் யாரையாவது காத்திருக்க வைப்பதில் அக்கறை காட்டுவதில்லை. இருப்பினும் மரியாதை நிமித்தமாக நீங்கள் மும்பைக்கு வரும் போது சந்திப்போம் என்று அவரிடம் நான் சொன்னேன்” என்று கூறினார்.

விளாசிய பண்ட்:
அது ரிஷப் பண்ட் பார்வைக்கும் சென்றதால் அதிருப்தியடைந்த அவர் சிலர் இதுபோல விளம்பரத்திற்காக பேசுவது வேடிக்கையாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசியின் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தார். இது குறித்து அவர் பதிவிட்டது பின்வருமாறு. “தலைப்புச் செய்திகளில் இடம் பெற வேண்டும் என்ற விளம்பரத்துக்காக சிலர் இப்படி பேட்டி கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. சிலர் பெயருக்காகவும் புகழுக்காகவும் இப்படி செயல்படுவது மிகவும் கவலைக்குரியதாகும். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறியதுடன் ஆளை விடுங்கள் சிஸ்டர், உங்களின் பொய்க்கும் எல்லைகள் உள்ளது என்று ஹாஷ்டேக் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதால் சில மணி நேரங்களுக்கு பின் அவர் அதை டெலிட் செய்துவிட்டார். இருப்பினும் அவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். அந்த நிலைமையில் அதைப் பார்த்த ஊர்வசி நேற்றைய ரக்ஷா பந்தன் தினத்தில் அவரை தம்பி என்று அழைத்ததுடன் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு கூறி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “சின்ன தம்பி பேட் மற்றும் பந்துகளில் மட்டும் விளையாட வேண்டும். நான் இளம் குழந்தையான உங்களை வைத்து தேவையற்ற புகழ் பெற விரும்பும் இளம் பெண் அல்ல டார்லிங்” என்று கூறியதுடன் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள், ஆர்பி சின்னத்தம்பி, அமைதியான பெண்ணிடம் அட்வான்டேஜ் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அவரை விட சிறந்தவர்னு நிரூபித்தால் தான் டி20 உ.கோ இடம் கிடைக்கும் – ஜடேஜாவை எச்சரிக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர்

இதை பார்த்த ரசிகர்கள் தற்போது தாம் உண்டு கிரிக்கெட் உண்டு என்ற வகையில் செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட்டை உண்மையாகவே இந்த நடிகை வேண்டுமென்றே விளம்பரத்துக்காக வம்பிழுப்பதாக அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement