சொந்த அணிக்குள் நிறவெறி கொடுமைக்கு உள்ளானேன் – நியூசி ஜாம்பவானின் கதையை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி,

taylor-1
- Advertisement -

உலகில் மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் சமம் என்ற கருத்துக்களை துச்சமாக நினைக்கும் பணக்காரர்களும் வெள்ளையர்களும் பணவெறி, இனவெறி, நிறவெறி போன்றவற்றில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதிலும் நிறத்தை அடிப்படையாக வைத்து ஒரு மனிதரை கேலி பேசுவது வெள்ளையர்களிடையே காலம் காலமாக தீராத வியாதியாக இருந்து வருகிறது. கிரிக்கெட்டிலும் நிறைய தருணங்களில் எதிரொலிக்கும் இந்த பிரச்சனை சமீபத்தில் இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் யார்க்ஷைர் அணிக்காக விளையாடும் போது மைக்கேல் வாகன் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் தன்மை நிறவெறியால் தீண்டியதாக அஷீம் ரபிக் குற்றம் சாட்டியது உலக அளவில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

அது கூட இரு வேறு நாட்டவர், இரு வேறு அணியினருக்கு இடையே நிகழ்ந்தது என்ற நிலைமையில் தற்போது நியூசிலாந்தை சேர்ந்த ஜாம்பவான் ராஸ் டெய்லரை அந்நாட்டைச் சேர்ந்த வீரர்களே நிறவெறி அடிப்படையில் கிண்டல் செய்த செய்தி மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ராஸ் டைலர் கடந்த 2006 முதல் சர்வதேச அளவில் 3 வகையான கிரிக்கெட்டிலும் தனது அபார பேட்டிங் திறமையால் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ஜாம்பவானாக போற்றப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்த நியூசிலாந்து வீரராக வரலாற்று சாதனை படைத்துள்ள இவர் கடந்த பிப்ரவரியில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

நிறவெறி புகார்:
பொதுவாக நிறைய நட்சத்திர விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பின் தங்களது வாழ்க்கையை பற்றிய சுய சரிதையை புத்தகமாக வெளியிடுவார்கள். அந்த வகையில் நியூசிலாந்தின் ஜாம்பவானான இவர் “ப்ளாக் & வைட்” என்ற தன்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை ஆகஸ்ட் 11-ஆம் தேதியான இன்று வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகத்தை வெளியிட்ட நிகழ்வில் பேசிய அவர் நியூசிலாந்துக்காக விளையாடும் போது பெரும்பாலும் வெள்ளை வீரர்களைக் கொண்ட தனது அணியில் தாம் மட்டும் மாநிறத்தை கொண்டவராக விளையாடியதால் நிறைய தருணங்களில் கிண்டல்களுக்கு உள்ளானதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நியூசிலாந்தில் கிரிக்கெட் என்பது வெள்ளையாக இருப்பவர்களுக்கான விளையாட்டாகும். எனது வாழ்நாளில் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் வெண்ணிலாவை போன்ற வெள்ளை நிற வரிசையில் ஒரு மாநிறம் நிறைந்த பழுப்புநிற முகமாக இருந்ததால் பல சவால்கள் இருந்தன. அவற்றில் பல உங்கள் அணி வீரர்களுக்கோ அல்லது கிரிக்கெட் விளையாடும் பொதுமக்களுக்கோ தெரியாது. பல தருணங்களில் எங்களது உடைமாற்றும் அறை கேலி காற்றழுத்தமானியாக இருந்தது”

- Advertisement -

“ஒரு சக அணி வீரர் எப்போதும் என்னிடம் “ராஸ் நீங்கள் பாதி நல்ல மனிதர் ஆனால் எந்த பாதி நல்லது?” என்று கூறுவார். இங்கு நான் எதை குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கு தெரியாது. மற்ற வீரர்களும் தங்கள் இனத்தைப் பற்றிய கருத்துக்களை கூற வேண்டியிருந்தது. எல்லா நிகழ்வுகளிலும் (வெள்ளை நியூசிலாந்து காரர்களிடமிருந்து) அந்த வகையான கருத்துக்களைக் கேட்கும் போது “ஓ, சரி, இது கொஞ்சம் கேலிக்குரியது போல” என்று நினைத்துக் கொள்வேன்” என்று கூறினார்.

பொதுவாகவே உலகின் மற்ற அணிகளை காட்டிலும் நியூசிலாந்து அணியும் அதில் விளையாடும் வீரர்களும் மென்மையானவர்கள் என்று வல்லுநர்களும் ரசிகர்களும் கூறுவார்கள். அந்த அளவுக்கு நல்ல குணங்களுடன் எதிரணியிடம் கூட மென்மையாக நடந்து கொள்வதாலேயே நியூசிலாந்து மற்றும் அதன் வீரர்களை அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்குள்ளேயும் இதுபோன்ற நிறவெறி கேலி கிண்டல் கருத்துக்கள் இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

இருப்பினும் நிறைய தருணங்களில் இது நட்புரீதியான கருத்துக்கள் என அவ்வாறு கேலி செய்யும் நபர்கள் கூறுவதால் பொதுமக்களிடம் இதைப்பற்றி அந்த பாதிப்புக்குள்ளாகும் நியூசிலாந்து வீரர்கள் கூறுவதில்லை என்று ராஸ் டைலர் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

“நான் தெளிவாக ஒன்று சொல்கிறேன். அவர்கள் இனவாத கண்ணோட்டத்தில் வந்ததாக ஒரு நிமிடம் கூட நான் நினைக்கவில்லை. அவர்களின் பாதிப்பில்லாத கேலிகள் உண்மையில் இலக்குகளை எதிர்கொள்கிறது. ஏனென்றால் அவர்கள் வித்தியாசமாக பார்க்கப்படுகிறார்கள் என்று அது அவர்களுக்கு சொல்கிறது. நீங்கள் எங்களில் ஒருவர் தோழரே என்ற செய்திகளுக்கு பதிலாக நீங்கள் அவர்களில் ஒருவர் என்ற கேலியைத் தான் கேட்க முடிகிறது ” என்று கூறினார்.

Advertisement