பொதுவாக கிரிக்கெட் விளையாட்டின் போது கிரிக்கெட் வீரர்களின் காதலிகளோ,மனைவிகளோ ஆட்டத்தை நேரில் கண்டு தனது பிரியமானவர்களை உற்சாகப்படுத்தி வருவார்கள்.ஆனால் கடந்த புதன்கிழமை அன்று சென்னைக்கு எதிராக ஆடிய பெங்களூரு அணியின் தோல்விக்கு அந்த ஆட்டத்தை நேரில் காண வந்த விராட் கோலியின் மனைவி தான் காரணம் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
#AnushkaSharma don't come to the ground because you are PANVATI fo #imvkohli ????
— saleemsaar (@saleemsaargmail) April 25, 2018
அந்த போட்டியின் போது முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 206 என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தும் சென்னை அணியிடம் தோல்வியடைந்தது. சென்னை அணி வெற்றி பெற்றதும் மைதானத்தின் சிறுப்பு பார்வையாளர்கள் பகுதியில் அமர்த்திருந்த தோனியின் மனைவி மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்தார். ஆனால் அவர் அருகே அமர்ந்து கொண்டிருந்த கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தலையை தொங்க போட்டுக்கொண்டு மிகவும் சோகமாக நின்றுகொண்டிருந்தார்.
இதனால் விராட் மனைவி அனுஷ்கா வந்ததால் தான் பெங்களூர் அணி அந்த ஆட்டத்தில் தோற்று விட்டார்கள் என்று பல ரசிகர்களும் அனுஷ்கா மீது குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வரும் ரசிகர்கள் தயவு செய்து நீங்கள் மேட்ச் பார்க்க மைதானத்திற்கு வராதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Mam i admire you as an actress lot but, i request you to plz do not visit RCB matches anymore we feel a lot in losing RCB as you vist!!! sorry to say this!!!
— Lachi (@LachiNaidu216) April 25, 2018
மேலும் ஒரு ரசிகர் ட்விட்டர் பக்கத்தில்” உங்களது நடிப்பு எங்களுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆட்டத்தை பார்க்க வரும் போது rcb அணி தோற்றுவிடுகிறது. எனவே நீங்கள் தயவு செய்து ஆட்டத்தை காண வராதீர்கள் ” என்று பதிவிட்டுள்ளார்.