ஆள் பாக்கத்தான் சின்ன பையனா இருக்காரு. ஆனா சிக்ஸ்லாம் தூரமா பறக்க விடுறாரு – டூபிளெஸ்ஸிஸ் புகழாரம்

faf
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்ய முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் என்ற பெரிய ரன் குவிப்பை வழங்கியது. துவக்க வீரராக டூபிளெஸ்ஸிஸ் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ருதுராஜ் 64 ரன்கள் எடுத்து அசத்தினார். இவர்கள் இருவரின் அதிரடி காரணமாக சென்னை அணி 220 என்ற பிரமாண்ட ரன்குவிப்பை வழங்கியது.

ruturaj

- Advertisement -

அதன்பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி பவர் பிளே 6 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான துவக்கத்தை கண்டது. அதன் பின்னர் போட்டி முடிந்தது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரசல் ஆகியோர் இணைந்து சென்னை அணிக்கு பயத்தை காட்டினர். இருவரும் சரமாரியாக சிஎஸ்கே அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து ரன்களை சேர்த்தனர். ஒருகட்டத்தில் 11 ஓவர்களில் 112 ரன்கள் வந்த நிலையில் ரசல் ஆட்டமிழந்தும் வெளியேறினார்.

அதன்பின்னர் சென்னை அணி எளிதாக வெற்றியை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த வேலையில் கம்மின்ஸ் 34 பந்துகளில் 66 ரன்கள் குவிக்க இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். அவர் இருக்கும் வரை கொல்கத்தா அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி இரண்டு வீரர்கள் அவரால் ரன் அவுட் ஆகி வெளியேறியதால் கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

cummins 1

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் டுப்லஸ்ஸிஸ் கூறுகையில் : இந்த போட்டி சிறப்பான ஒரு போட்டியாக அமைந்தது. கடந்த போட்டியில் நாங்கள் சிறப்பான துவக்கத்தை கண்டோம். ஆனால் அதைவிட இன்றைய போட்டியில் மிகச் சிறப்பான துவக்கம் சென்னை அணிக்கு கிடைத்தது. இதற்கு காரணம் துவக்கத்தில் நாங்கள் பயமின்றி விளையாடியது தான் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். ஜடேஜா மிகவும் சிறப்பாக பந்து வீசினார்.

Ruturaj

இந்த மைதானத்தில் கிரிப் செய்ய கொஞ்சம் கடினமாக இருந்ததால் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருபுறம் கடின பட்டாலும் சிறப்பாகவே செயல்பட்டனர். எங்கள் அணியில் கெய்க்வாட் மிகச் சிறந்த இளம் வீரர் அவருடைய டைமிங் மற்றும் டெக்னிக் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. பார்ப்பதற்கு சிறிய பையன் போன்று இருந்தாலும் அவர் அடிக்கும் பந்து மிக தூரம் செல்கிறது தோனியின் தலைமையில் விளையாடுவது மகிழ்ச்சி. அவருக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும். அவரின் தலைமையின் கீழ் விளையாடுவது அதிர்ஷ்டம் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement