சி.எஸ்.கே அணிக்கு இவரைப்போன்ற ஒருவீரர் இனி கிடைக்க மாட்டார்கள் – டூப்ளெஸ்ஸி ஓபன் டாக்

Faf
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெறும். இந்த வருடம் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 29ஆம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னரும் வைரசின் தாக்கம் குறையாத காரணத்தால் தற்போது அடுத்த அறிவிப்பு வரும் வரை கால வரையின்றி ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Duplesis

- Advertisement -

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தோனியின் போன்று மீண்டும் ஒரு பினிஷர் கிடைப்பது கிரிக்கெட் உலகில் மிக கடினம் என்று சென்னை அணியின் முன்னணி வீரர் டூப்லெஸிஸ் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக தோனி ஆடிய ருத்ர தாண்டவத்தை குறிப்பிட்டு காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : சிஎஸ்கே அணியின் ஆரம்ப கட்டத்தில் இருந்து தோனி இருக்கிறார். நான் அவரை ஒரு மிகச் சிறந்த மனிதராக பார்க்கிறேன். அவர் ஒரு ஆட்டத்தை கொண்டு செல்லும் விதம், அதனை இறுதி வரை எடுத்துக் கொண்டுபோய் முடித்து வைக்கும் விதம் இவை எல்லாமே மிக சிறப்பானது .

Dhoni 1

கடந்த வருடம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து திணறியது. அந்த போட்டியில் எப்படியும் 90 ரன்களில் ஆட்டமிழந்து விடுவோம் என்று எதிர்பார்த்தோம் . ஆனால், அந்த நேரத்தில் களமிறங்கிய தோனி கடும் நெருக்கடியில் சிறப்பாகக் கையாண்டு 40 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார்.

அந்த போட்டியில் அவர்கள் விளாசிய சிக்ஸர்கள் அனைத்தும் மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்தது என்று கூறியுள்ளார் பாப் டூப்லெஸிஸ். சி.எஸ்.கே அணிக்கு இதுபோன்ற பினிஷர் கிடைப்பது மிக அரிது என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement