மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியை தவறவிடும் 2 சி.எஸ்.கே வீரர்கள் – விவரம் இதோ

CSK-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த எஞ்சியுள்ள தொடரின் முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் தற்போது ஐக்கிய அமீரகம் வந்தடைந்து பயிற்சியில் ஈடுபட்டு இந்த தொடருக்காக தயாராகிவிட்டனர்.

csk

- Advertisement -

சிஎஸ்கே அணிவிளையாடவுள்ள இந்த முதல் போட்டியில் இரண்டு வீரர்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி சென்னை அணியின் துவக்க வீரரான டூபிளெஸ்ஸிஸ் நிச்சயம் இந்த முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகின்றது. ஏனெனில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் கரீபியன் லீக் தொடரில் விளையாடி வந்த அவருக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

அந்த காயம் காரணமாக அந்த தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் அவர் விளையாடவில்லை. அவரின் காயம் குணமடைந்ததாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதன் காரணமாக நிச்சயம் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளையோ அல்லது இந்த முழு தொடரையோ அவர் தவற விட வாய்ப்புள்ளது.

Faf

அதேபோன்று இங்கிலாந்து அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் தாமதமாக செப்டம்பர் 15ஆம் தேதி தான் ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்தார்.

curran

எனவே அவர் கட்டாயமாக 6 நாட்கள் குவாரன்டைன் இருக்க வேண்டும் என்கிற காரணத்தினால் 21 ஆம் தேதி தான் அணி வீரர்களுடன் அவரால் இணைய முடியும். எனவே 19ஆம் நாள் தேதி நடக்கும் முதல் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று உறுதியாகியுள்ளது. எனினும் சிஎஸ்கே அணி தற்போது உள்ள நிலையில் நிச்சயம் தொடர் வெற்றிகளை குவிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement