எல்லாம் விதி வேறென்ன சொல்ல. பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி குறித்து – மோர்கன் பகிர்ந்த சோகம்

Morgan-1
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 46 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

KXIPvsKKR

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் கில் 57 ரன்களையும் கேப்டன் இயான் மோர்கன் 40 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், ஜோர்டான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பின்னர் 150 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 150 குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மந்தீப் சிங் 66 ரன்களையும், கெயில் 51 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Mandeep 1

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இயான் மோர்கன் கூறுகையில் : ஷார்ஜா போன்ற மைதானங்களில் விக்கெட்டுகள் இழுந்தாலும் உடனடியாக அதிரடியாக விளையாட வேண்டும். ஏனெனில் இது ஒரு ஹைஸ்கோரிங் பிட்ச் எங்களது அணியில் பேட்டிங் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் நிறைய ரன்களை குவித்து இருக்க வேண்டும். ஆனால் 3 விக்கெட்டுகளை இழந்த போது சிறப்பான ஒரு கூட்டணியை அமைக்க நினைத்தோம்.

Shami

180 முதல் 190 வரை ரன்கள் எடுத்தால் மட்டுமே இந்த மைதானத்தில் அது நல்ல ஸ்கோர் ஆக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து விட்டோம் இது ஒரு காரணம் மட்டுமே. இந்த ஆண்டு முழுவதும் எங்களுக்கு சவாலாக இருந்தது கடைசியாக இரண்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பும் எங்கள் கையில் இருந்தும் விதியினால் அதனை இழந்துள்ளோம் என்றும் வருத்தமாக மோர்கன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement