AUS vs ENG : நாங்கள் சிறப்பாக பந்துவீசியும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக தோற்க இதுவே காரணம் – மோர்கன்

உலக கோப்பை தொடரின் 32 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து

Morgan
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 32 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

Finch

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்தது. பின்ச் அதிகபட்சமாக 100 ரன்களை குவித்தார் மேலும் வார்னர் 53 ரன்கள் குவித்தார் .

இதனைத் தொடர்ந்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 44.4 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்துசார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 89 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் பெரென்ட்ராப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Starc-1

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறியதாவது : இன்றைய போட்டியில் நாங்கள் முதலில் சிறப்பாக பந்து வீசினோம் .ஆனால் அதிர்ஷ்டவசமாக இன்றி எங்களுடைய ஆட்டம் இன்று தவறியது. ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக ரன்களை குவித்தனர். அவர்களுடைய பார்ட்னர்ஷிப் எளிதாக இருந்தது காலை போட்டி தொங்கும் போது மைதானம் மெதுவாக இருந்ததால் நாங்கள் சேஸிங்கை தேர்வு செய்தோம். பின்ச் சிறப்பாக ஆடினார் அவருடைய துவக்கம் அந்த அணியை பெரிய பாட்னர்ஷிப்க்கு எடுத்துச் சென்றது. மேலும் நாங்கள் விளையாடும் பொழுது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் நாங்கள் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்று மோர்கன் கூறினார்.

Advertisement