வார்னரை தொடர்ந்து கேப்டன் பதவியை இழக்கும் ஆபத்தில் உள்ள மற்றொரு முன்னணி கேப்டன் – சீக்கிரம் சேன்ஞ் இருக்கும்

Warner
- Advertisement -

நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வார்னரை கேப்டன் பதவியில் இருந்து தூக்கி கேன் வில்லியம்சனை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. இந்த ஆண்டு நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் இதுவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி உள்ளது அதில் ஐந்து தோல்விகளை பெற்று, ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பரிதாபத்திற்குரிய நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளது. வார்னர் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் சொதப்பி வருகிறார். ரன் அடிப்பதிலும் சரி அணியை தலைமைதாங்கும் சரி இரண்டிலுமே சொதப்பி எந்த தொடர்பும் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமாக விமர்சனத்திற்கு ஆளாகி இதன் காரணமாகவே ஹைதராபாத் அணி நிர்வாகம் அவரை கேப்டன் பதவியிலிருந்து தூக்கி உள்ளது.

warner 1

- Advertisement -

2014 ஆம் ஆண்டு வார்னர் ஹைதராபாத் அணிக்கு விளையாட தொடங்கினார். இதுவரை ஹைதராபாத் அணிக்காக 4 ஆயிரம் ரன்களை குவித்த ஒரே வீரர் அவர்தான். மேலும் மூன்று வருடங்கள் அதிக ரன்களை குவித்து ஹைதராபாத் அணி சார்பாக ஆரஞ்சு கேப்பையும் அவரே கைப்பற்றினார். 2016ம் ஆண்டு தனியாளாக போராடி அந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு முதல் கோப்பையை பெற்றுத்தந்தார். மேலும் மூன்று ஆண்டுகள் பிளே ஆப் சுற்றுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அழைத்துச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரே ஆண்டு சரியாக செயல்படாத காரணத்தினால் அவரை கேப்டன் பதவியிலிருந்து தூக்கியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இருப்பினும் கேப்டன் பதவி கேன் வில்லியம்சன் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் மிக அற்புதமாக தலைமை தாங்கக்கூடிய வீரர் ஆவார். வார்னர் இல்லாத பொழுது 2018 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை மிக சிறப்பாக தலைமை தாங்கி இறுதிவரை கேன் வில்லியம்சன் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Warner

இந்நிலையில் ஹைதராபாத் அணியை போலவே கொல்கத்தா அணியும் மிக மோசமாக விளையாடி வருகிறது. 7 போட்டிகளில் இரண்டு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று மற்ற ஐந்து போட்டிகளிலும் தோல்வி பெற்றுள்ளது. அந்த அணியை இயான் மோர்கன் சரியாக தலைமை தாங்க தவறியுள்ளதாக அந்த அணி கருதி வருகிறது. மேலும் 7 போட்டிகளில் வெறும் 92 ரன்களை மட்டுமே எடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Morgan

எனவே ஹைதராபாத் அணியில் ஏற்பட்ட மாற்றம் போல கொல்கத்தா அணியும் ஒரு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. கேப்டன் பதவியை மோர்கனிடமிருந்து தினேஷ் கார்த்திக்கு கேப்டன் பதவியை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இது வெறும் வதந்தி தான் என கொல்கத்தா அணி கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement