தேவையான சான்ஸ் கொடுத்தாச்சு.. இனிமேலும் அவரை நம்பாம வேற பிளேயரை பாருங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து

Sanjay Manjrekar
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடி வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா இரண்டாவது போட்டியில் வென்று என்ற 1 – 1* (5) கணக்கில் சமன் செய்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடி வரும் கே.எஸ். பரத் கீப்பிங் செய்வதில் நன்றாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் ரன் குவிக்க தடுமாறி வருகிறார்.

காயமடைந்த ரிஷப் பண்ட்க்கு பதிலாக கடந்த 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற அவர் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 221 ரன்களை 20.09 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார். குறிப்பாக 30 வயதை நிரம்பியுள்ள அவர் இதுவரை பெரும்பாலும் சொந்த மண்ணில் விளையாடியும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

- Advertisement -

சான்ஸ் கொடுத்தாச்சு:
இந்நிலையில் கேஎஸ் பரத்துக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு விட்டதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். எனவே 30 வயதாகும் பரத் இளம் வீரர் கிடையாது என்பதால் இனியும் நம்பாமல் மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“அவர் நிறைய முறை தன்னுடைய முதல் தொடரில் விளையாடுவது போல் செயல்படுகிறார். ரிஷப் பண்ட் காயமடைந்தது முதல் விளையாடி வரும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 4 முழுமையான போட்டிகளில் விளையாடினார். எனவே இன்னும் கேஎஸ் பரத் மீது நீங்கள் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து முதலீடு செய்வதில் மதிப்பு உள்ளதாக நான் கருதவில்லை”

- Advertisement -

“மேலும் அவர் 20 வயதாகும் வீரர் கிடையாது. அதனால் ஏற்கனவே இந்திய அணி இசான் கிசான் பக்கம் நகர்கிறது. இந்த அணி நிர்வாகம் ஒவ்வொருவருக்கும் நியாயமான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்பதை நம்புகிறது. ஆனால் நான் ரிஷப் பண்ட் வருவதற்கு முன்பாக மற்றொரு வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப் பார்ப்பேன். பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத கேஎஸ் பரத்தை தாண்டி இந்தியா பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: பழி வாங்க மாட்டோம்.. ஆனா அதை மட்டும் செய்றது சத்தியம்.. ஃபைனல் பற்றி இந்திய கேப்டன் பேட்டி

“ஏற்கனவே இந்த விஷயத்தில் இந்தியா பின்தங்கியுள்ளது. ஏனெனில் தற்போது அனைத்து அணிகளிலும் விக்கெட் கீப்பர்கள் பேட்டிங்கில் பெரிய பங்காற்றி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக கடந்த 3 – 4 வருடங்களாக ரிசப் பண்ட் பேட்டிங்கில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை பாருங்கள். எனவே அந்த அம்சத்தை இந்திய அணி நிர்வாகம் பார்க்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல இப்போதெல்லாம் உலகின் எந்த அணியும் கீப்பிங் செய்வதற்காக மட்டும் கீப்பர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement