கவலைப்படாதீங்க இந்த டைம்.. இந்தியா மீது அந்த புகார் சொல்ல மாட்டோம்.. இங்கிலாந்து வீரர் பேட்டி

Ollie Pope
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி துவங்கும் இந்த தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. அதில் 2012க்குப்பின் 14 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவை அதன் சொந்த ஊரில் தோற்கடித்து டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது.

மறுபுறம் கடந்த 14 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் என்ன தான் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடியாக விளையாடினாலும் இந்தியாவில் இயற்கையாகவே இருக்கும் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களை தாண்டி இங்கிலாந்து வெல்வது கடினமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

புகார் வராது:
முன்னதாக கடைசியாக 2021ஆம் ஆண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய போது இந்தியா வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை தயாரித்ததாக மைக்கேல் வாகன் உட்பட இங்கிலாந்தை சேர்ந்த ஏராளமானவர்கள் விமர்சித்தார்கள். ஆனால் இம்முறை முதல் நாளின் முதல் பந்திலிருந்தே பிட்ச் சுழன்றாலும் அதைப் பற்றி நாங்கள் புகார் செய்ய மாட்டோம் என இங்கிலாந்து வீரர் ஓலி போப் தெரிவித்துள்ளார்.

மாறாக சவாலை சமாளித்து இந்தியாவை தோற்கடிக்க முயற்சிப்போம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி கார்டியன் பத்திரிகையில் பேசியது பின்வருமாறு. “அங்கே வெளிப்புற சத்தங்கள் நிறைய இருக்கும். அந்தத் தொடரில் பிட்ச் பற்றி அதிகப்படியான பேச்சுக்கள் இருக்கும். ஆனால் ஒரே பிட்ச்சில் தான் 2 அணிகளும் விளையாடுகின்றன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதை சமாளிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்”

- Advertisement -

“இங்கிலாந்தில் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்துவதற்காக பிட்ச்களில் பச்சை புற்கள் அதிகமாக விடப்படலாம். எனவே தங்களின் ஸ்பின்னர்கள் அசத்துவதற்காக இந்தியாவும் அதே போல செய்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. சொல்லப்போனால் குறைந்த ரன்கள் மட்டுமே அடிக்கப்படும் டெஸ்ட் போட்டிகள் பார்ப்பதற்கு அபாரமாக இருக்கும்”

இதையும் படிங்க: 462 ரன்ஸ்.. பந்தாடிய படிதார், சர்ப்ராஸ் கான்.. இந்தியா ஏ அணியிடம் அடங்கிய இங்கிலாந்து லயன்ஸ்

“சமீபத்திய தென்னாபிரிக்க – இந்திய அணிகள் மோதிய போட்டியை நான் சற்று பார்த்தேன். பந்து பறந்த அந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க தடுமாறினார்கள். அதே போல இந்த தொடரில் ஸ்கோர்கள் இருக்கலாம். ஆனால் இம்முறை இந்தியாவின் பிட்ச்களில் முதல் பந்திலிருந்தே பந்து சுழன்றால் அதைப் பற்றி நாங்கள் புகார் செய்ய மாட்டோம்” என்று கூறினார்.

Advertisement