இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாரம்பரிய தொடரான ஆஷஸ் தொடர் தற்போது நடந்து முடிவடைந்துள்ளது. இந்தத் தொடரில் இரு அணிகளும் வெற்றி தோல்வியின்றி 2-2 என்ற கணக்கில் ஆஷஸ் தொடர் இம்முறை சமனில் முடிந்தது. சென்ற முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றியது.
Fierce competitors on the field, but so much respect between these two sides ???? pic.twitter.com/fylX9HtWaD
— England Cricket (@englandcricket) September 16, 2019
இந்நிலையில் தற்போது இந்தப் போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் ஒரே அறையில் மகிழ்ச்சியாக வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு மேலும் மது அருந்தும் காட்சியையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ எனது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதற்கு காரணம் யாதெனில் இரு அணி வீரர்களும் ஒரே ஓய்வறையில் பியர் குடிப்பது போன்று இந்த வீடியோ இருப்பதால் அனைவரும் இதனை ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிநாடுகளில் இது போன்ற விடயங்கள் சகஜம் என்பதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதனை நேரடியாக வீடியோவாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.