PAK vs RSA : நியாயப்படுத்த எதுவும் இல்லை. தோல்விக்கு இதுவே காரணம் – டூபிளிஸ்சிஸ்

உலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமை

Duplissis
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

pak vs rsa

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோஹைல் 89 ரன்களும், பாபர் அசாம் 69 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 259 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஹாரிஸ் சோஹைல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

azam

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளிஸ்சிஸ் கூறியதாவது : நாங்கள் சரியான கிரிக்கெட் விளையாடவில்லை. இந்த தொடர் முழுவதும் ஆரம்ப விக்கெட்டுகளை கைப்பற்றிய நாங்கள் பாகிஸ்தான் அணிக்காக அணிக்கு எதிரான போட்டியில் ஆரம்பத்தில் கைப்பற்றவில்லை. அவர்களின் ஸ்கோரை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் ஆனால் அது முடியாமல் போக அவர்கள் சிறப்பாக ரன்களை குவித்து விட்டனர்.

rsa

மேலும் ஆரம்பத்திலேயே நாங்கள் விக்கெட்டை இழந்து அடுத்து நல்ல பாட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டோம். மேலும் இடையில் விக்கெட்டை இழந்தது போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. கடுமையாக பயிற்சி செய்தோம் ஆனாலும் விளையாட்டில் நம்பிக்கை என்பது முக்கியம் எங்கள் அணியின் தோல்வியை நிச்சயம் நியாயப்படுத்த விரும்பவில்லை. நாங்கள் இந்த தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன் என்று டுபிளிஸ்சிஸ் கூறினார்.

Advertisement