RCB vs CSK : எல்லைக்கோட்டின் அருகே ஜோடி போட்டு கேட்ச் பிடித்த சி.எஸ்.கே வீரர்கள் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி

Duplissis
- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணியின் வீரரான ஸ்டோனிஸ் 14 ரன்கள் எடுத்திருந்தபோது இம்ரான் தாஹிர் வீசிய பந்தை தூக்கி அடித்தார். அந்த பந்து எல்லைக்கோடு வரை சென்றது. அப்போது எல்லைக்கோட்டின் அருகில் இருந்த சென்னை வீரரான டுப்ளிஸிஸ் அருமையாக பிடித்தார். பந்தை பிடித்ததும் நிலை தடுமாறிய அவர் பந்தினை உள்ளே தூக்கி போட்டார். அந்த பந்தை சக சென்னை வீரர் கேட்ச் பிடிக்க ஸ்டோனிஸ் அவுட் ஆகி வெளியேறினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஏற்கனவே பீல்டிங்கில் சிறப்பாக செயல்படும் டுப்ளிஸ்சிஸ் இதுபோன்ற பல கேட்ச்களை பிடித்திருப்பது குறிப்பிடதக்கது. இந்த கேட்ச் இந்த தொடரின் சிறப்பான கேட்ச்களில் ஒன்றாக உள்ளது. இந்த விடீயோவினை தற்போது சென்னை அணி வீரர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 ரன்களும், மொயின் அலி 26 ரன்களையும் அடித்தனர். இதனால் சென்னை அணிக்கு 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை அடித்து 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமின்றி தோற்றது. தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கால் இருந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்துகளில் தோனி 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 24 ரன்களை சேர்த்தார். கடைசி பந்தை அடிக்க முடியாமல் விட மறுமுனையில் இருந்து பைஸ் ஓடிய தாக்கூர் ரன் அவுட் ஆனார். இதனால் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Advertisement