இறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டால் கோப்பை இவர்களுக்கு தான் – டூபிளிஸ்சிஸ்

Faf
- Advertisement -

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் நாளை அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

ind

- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து அணியை அரையிறுதி போட்டியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று பலரும் கூறி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனான டுபிளிசிஸ் இந்திய அணியின் இறுதி ஆட்டம் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது :

இந்திய அணி நிச்சயம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அதே போன்று அவர்களுக்கு எதிரில் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அணி ஆகிய இரண்டு அணிகளில் ஒன்று இறுதிப்போட்டிக்கு செல்லும் வேளையில் எந்த அணி தகுதி பெற்றாலும் இந்திய அணி எதிரணியை எளிதாக சமாளிக்கும். ஒருவேளை சொந்த மைதானம் காரணமாக இங்கிலாந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தாலும் இங்கிலாந்து அணியை இந்திய அணி இறுதிப் போட்டியில் சிறப்பாக கையாளும் என்றே நான் எண்ணுகிறேன்.

Shami

ஏனெனில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய அணி இப்போது பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் மிக பலமாக உள்ளது. எனவே இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் இந்திய அணியே கோப்பையை கைப்பற்றும் என்றும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement