இவர்கள் அணியில் இல்லாததே இந்த மோசமான தோல்விக்கு காரணம் – டூபிளிஸ்சிஸ் புலம்பல்

Faf-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வரும் 19ம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

Markram 1

- Advertisement -

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளிஸ்சிஸ் இந்த தோல்வி குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது : அனுபவம் இல்லாத அணியை நாங்கள் தற்போது கொண்டுள்ளதால் இந்த மோசமான தோல்வி ஏற்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் அதிகம் உடையவர்களாக உள்ளனர். இந்திய வீரர்கள் அவர்களின் திறமையை முழுவதுமாக இந்த தொடரில் பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த நேரத்தில் அனுபவம் குறைந்த வீரர்களை தற்போது தென்னாப்பிரிக்க அணி கொடுள்ளது. அனுபவவீரர்கள் இல்லாத நிலையில் நாங்கள் தற்போது உள்ளோம். எங்கள் அணியில் பல்வேறு புதுமுக வீரர்களே தற்போது ஆடி வருகின்றனர். அவர்கள் இன்னும் முதிர்ச்சி அடைய ப;பல போட்டிகள் தேவைப்படும்.

Muthusamy 1

ஸ்டெய்ன், மோர்கெல், டிவில்லியர்ஸ் மற்றும் ஆம்லா போன்றவர்கள் மிகுந்த அனுபவம் கொண்ட வீரர்கள் இருந்திருந்தால் நாங்கள் இந்திய அணிக்கு சவால் கொடுத்திருப்போம். மேலும் அவர்களின் இடத்தை ஒரே இரவில் யாராலும் நிரப்ப முடியாது என்று டூப்ளிஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement