ஆளை மாற்றியும் வேலைக்கு ஆகல. தப்பு கணக்கு போட்டு மைதானத்தில் அசிங்கப்பட்ட டூபிளிஸ்சிஸ் – விவரம் இதோ

Faf-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சி மைதானத்தில் இன்னும் சிறிது நேரத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி தோல்வி தொடரை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Ind vs Rsa

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணி டாஸில் வெற்றிபெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த டாஸ் போடும் நிகழ்வின்போது தென்னாபிரிக்க அணியின் கேப்டனான டூபிளிஸ்சிஸ் உடன் அந்த அணியின் துணைக்கேப்டன் பாவுமாவும் டூபிளெஸ்ஸிஸ் உடன் டாஸ் கேட்க வந்தார்.

கடந்த ஆறு போட்டிகளாக டாசில் வெற்றி பெறாததால் ஏமாற்றமடைந்த டூபிளிஸ்சிஸ் நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதுபோலவே இன்று தன்னுடன் பவுமாவை அழைத்து வந்து டாஸ் கேட்க இன்றும் அவருக்கு ஏமாற்றமே அமைந்தது. ஏனெனில் இந்திய அணி டாஸில் வெற்றி பெற்றது.

toss

இன்றைய போட்டியிலும் அவர் டாஸை இழக்க அவர் போட்ட கணக்கு தவறாகபோக அவர் சிரித்தபடி நின்றார். தற்போது இந்திய அணி முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

Advertisement