3 ஆவது டெஸ்டில் ஷ்ரேயாஸ் மற்றும் விஹாரிக்கு வாய்ப்பு உண்டா? – டிராவிட் அளித்த தெளிவான பதில்

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வருகிற 11-ஆம் தேதி கேப்டவுனில் துவங்குகிறது.

INDvsRSA

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் விஹாரி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால் தற்போது இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில் : 2வது டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் இரண்டு இன்னிங்சிலுமே தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

vihari

அதேபோன்று சமீபத்தில் இந்திய அணிக்காக அறிமுகமாகி நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயரும் நல்ல வீரர்தான். ஆனாலும் அணியில் மூத்த வீரர்கள் இருவர் இருக்கும் போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு காத்திருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விஹாரி ஆகியோர் கிடைக்கும் வாய்ப்புகளில் சரியாக செயல்பட்டு ரன்களை குவிக்க வேண்டும் என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் டீம்ல இல்லாமலே பங்களாதேஷ் அணி சாதிச்சிட்டாங்க. ரொம்ப ஹேப்பி – ஷாகிப் அல் ஹசன் மகிழ்ச்சி

இதன் மூலம் தொடர்ந்து புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவார்கள் என்று உறுதியாகியுள்ளது. அனுபவ வீரர்கள் என்கிற காரணத்தினாலேயே இவர்கள் எத்தனை ஆட்டங்கள் தான் சேர்க்கப்படுவார்கள் என்ற பேச்சும் ஒருபக்கம் தொடர்ந்துகொண்டு தான் வருகிறது.

Advertisement