ஜனவரி 11 ஆம் தேதிக்கு முன் விராட் கோலி எல்லா கேள்விக்கும் பதிலளிப்பார் – டிராவிட் அதிரடி அறிக்கை

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நடைபெற்று முடிந்த வேளையில் இந்திய அணியானது அந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது போட்டி நாளை முதல் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

INDvsRSA

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 11ஆம் தேதி கேப்டன் நகரில் நடைபெற இருக்கிறது. அந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்வார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய டிராவிட் கூறுகையில் : விராட் கோலியை சுற்றி தற்போது பெரிய சர்ச்சை நீடித்து வருகிறது. அவரது கேப்டன்சி நீக்கம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இது குறித்த சர்ச்சைகளுக்கெல்லாம் விராட் கோலி எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார் என பலரும் கூறி வருகின்றனர்.

dravid 1

அவர் ஜனவரி 11-ம் தேதி கேப்டவுனில் நடைபெற இருக்கும் தனது 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறார். அந்த போட்டிக்கு முன்பாக நிச்சயம் உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி பதிலளிப்பார் என டிராவிட் அதிரடியான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி படைக்கவுள்ள சாதனைகள் – லிஸ்ட் இதோ

அதன்படி விராட் கோலி 11-ஆம் தேதிக்கு முன்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பல்வேறு விடயங்களை வெளிப்படையாக பேச இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement