இரண்டு ஆண்டுகளாக சரிந்திருந்த தனது புகழை தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் தொடரில் தூக்கி நிறுத்தி விட்டார் நம்ம தல தோனி. இந்த ஐ.பி.எல் தொடரின் போது தோனி மீது எந்த அளவிற்கு ரசிகர்கள் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் தோனியின் காலில் விழந்த வீடியோ வெளியான போது பலரும் அறிந்து கொண்டனர்.
Say bye to your Monday blues with loads of cuteness and a royal salute! #whistlepodu #Thala @msdhoni #yellove ???????????? pic.twitter.com/v3LVMmZkGk
— Chennai Super Kings (@ChennaiIPL) May 14, 2018
இந்நிலையில் நேற்று (மே 13) புனே மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது தோனிக்கு அங்கிருந்த காவல் நாய்க்கும் இடையே ஒரு ஸ்வாரஸ்யமா சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மைதானத்தின் ஆடுகளத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு பாதுகாவலர் வைத்திருந்த நாயிடம் சென்ற தோனி, அதனை தொட்டு தழுவி விளையாடினார்.
ஒரு கட்டத்தில் அந்த நாய் அதை பிடித்துக் கொண்டிருந்த பாதுகாவலர் இட்ட ஆணைக்கிணங்க தோனியிடம் மண்டியிட்டது. அந்த காவலரும் தோனிக்கு சலூயூட் அடித்து மரியாதை செலுத்தினார். இதோ அந்த அற்புதமான வீடியோ பதிவு.