இன்றைய போட்டியில் நாங்கள் ஜெயிக்க இதனை செய்தே ஆகவேண்டும் – டிவில்லியர்ஸ் பேட்டி

Divilliers
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 14 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோத உள்ளன.

Ipl cup

- Advertisement -

இந்த தொடரில் இதுவரை பெங்களூரு அணியும், ராஜஸ்தான் அணியும் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்து உள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டி குறித்து பெங்களூரு அணியின் வீரரான டிவில்லியர்ஸ் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் டிவில்லியர்ஸ் கூறியதாவது : பெங்களூரு அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்து உள்ளன.எங்கள் அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே பலவீனமாக உள்ளது. பேட்ஸ்மேன்கள் தங்களது திறமையின் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த போட்டியை சந்திக்க வேண்டும்.

rcb

முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்தாலும் இளம் வீரர்கள் தங்களது பொறுப்பினை உணர்ந்து தாங்கள் முன்வந்து அணிக்கு வெற்றியை தரவேண்டும் என்று எண்ணி போட்டியை அணுகவேண்டும். அப்போதுதான் இந்த தொடர் தோல்விகளில் இருந்து நாம் மீண்டு வரமுடியும். எனவே, இன்றைய போட்டியை புதிய போட்டியாக நினைத்து இன்றிலிருந்து வெற்றி கணக்கினை தொடங்க வேண்டும் என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

Advertisement