RCB vs KXIP : கடைசி நேரம் வரை காத்திருந்தேன் நான் யோசித்த இந்த திட்டமே சிறப்பாக ஆடவைத்தது – டிவில்லியர்ஸ்

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப்

ABD
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 42 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

Ashwin 1

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்களை அடித்தார், ஸ்டோனிஸ் 46 ரன்களை அடித்தார்.

இதனால் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே அடித்தது. பஞ்சாப் அணி சார்பாக பூரான் 28 பந்துகளில் 46 ரன்களும், ராகுல் 42 ரன்களும் குவித்தனர். இதனால் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 44 பந்துகளில் 82 ரன்களை குவித்த டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Divilliers

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் டிவில்லியர்ஸ் கூறியதாவது : கடைசி சில ஓவர்களில் பொறுமையாக இருக்க நினைத்தேன். ஆனால், எல்லா நேரத்திலும் இது நடந்திடாது. துவக்கத்தில் பொறுமையாக இருந்ததால் எங்களுடைய மைதானம் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். துவக்கத்தில் இந்த மைதானத்தில் ரன்களை அதிரடியாக அடிக்கமுடியவில்லை. கடைசி நேரத்தில் மைதானத்தின் போக்கை புறிந்து விரைவாக ரன்களை குவித்தோம்.

160 ரன்கள் இந்த போட்டிக்கு போதும் என்று நினைக்கிறன். ஆனால், கடைசி கட்டத்தில் நானும், ஸ்டோனிஸ் சிறப்பாக விளையாடி ரன்களை அதிகரித்தோம். இந்த மைதானத்தில் சேசிங் செய்வது எளிதானது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெற எங்களது அணியின் பந்துவீச்சாளர்களே காரணம். அவர்கள் சிறப்பாக தங்களது திட்டங்களை வகுத்து சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.

Advertisement