இவரின் துவக்கமும், இவரின் பினிஷிங் மட்டுமே வெற்றிக்கு காரணம் – தினேஷ் கார்த்திக் பேட்டி

Dinesh
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடந்த 6 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது பஞ்சாப் அணி அதனால் கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.

Ashwin

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனால் 219 ரன்கள் இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 190 ரன்களை மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

வெற்றிக்கு பிறகு பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது : இந்த தொடர் ஆரம்பம் முதலே எங்கள் அணிக்கு நல்ல தொடராக அமைந்து வருகிறது. நிதிஷ் ராணா அருமையாக விளையாடினார். மேலும் உத்தப்பா அருமையான துக்கம் தந்தார். ரஸ்ஸல் வழக்கம்போல சிறப்பாக முடித்து வைத்தார். இவை இரண்டுமே கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பெரிதளவில் உதவின.

Robin

மேலும், காயத்திலிருந்து மீண்டு வந்த நரேன் சிறப்பாக ஆடினார். அவர் துவக்க வீரராக ஆடுவது எப்போதும் அணிக்கு ஆரோக்கியமான போட்டியை அளிக்கிறது என்று தினேஷ் கார்த்திக் கூறினார். இன்று இரவு 8 மணிக்கு துவங்க உள்ள போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement