இவங்க 2 பேரு மேல நான் வச்ச நம்பிக்கை தான் சென்னை அணிக்கு எதிரான வெற்றிக்கு காரணம் – தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி

Karthik
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கணேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் திரிப்பாதி 51 பந்துகளில் 81 ரன்களை குவித்து அசத்தினார். சென்னை அணி சார்பாக பிராவோ 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் 12 வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் வாட்சன் 50 ரன்களும் அம்பத்தி ராயுடு 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதுவரை சென்னை அணி வெற்றி பெறும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதன் பிறகு வழக்கம்போல தோனி, சாம்கரன், கேதார் ஜாதவ் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்ப இறுதியில் ஜடேஜா 8 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராகுல் திரிப்பாதி தேர்வானார்.

Tripathi

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது : எங்கள் அணியில் சில “கீ பிளேயர்கள்” உள்ளனர். அந்த வகையில் சுனில் நரைன் எங்களது அணிக்கு ஒரு முக்கியமான வீரர். இந்த போட்டியில் அவர் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். 2-3 மோசமான போட்டியை அவர் விளையாடி இருந்தாலும் அதெல்லாம் முக்கியமான விடயம் இல்லை. இன்று அவர் விளையாடிய விதம் அற்புதமானது. திரிப்பாதி பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

narine

ரசலைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அவர் பேட்டிங்கில் எந்த இடத்தில் இறங்கினாலும் சரி சிறப்பாக விளையாடக் கூடியவர் இன்று பவுலிங்கில் அசத்தியுள்ளார். மேலும் சென்னை அணி பேட்டிங்கை சிறப்பாகவே துவங்கியது. அவர்கள் அருமையாக பேட்டிங் செய்தார்கள் இருப்பினும் எனக்கு சுனில் நரேன் மற்றும் வருன் சக்ரவர்த்தி ஆகியோர் மீது அதீத நம்பிக்கை இருந்தது அவர்கள் என் நம்பிக்கையை காப்பாற்றி வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள் என்று கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement