Dinesh Karthik : பந்துவீச்சு சிறப்பாக இருந்தும் இந்த ஒரு பலவீனத்தாலே போட்டியை இழந்தோம் – கார்த்திக் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 38 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு ஐதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், வில்லியம்சன் தலைமை

Karthik
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 38 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு ஐதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

Dinesh

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தது சன் ரைசர்ஸ் அணி. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக லின் 51 ரன்களையும், ரின்கு சிங் 30 ரன்களையும் அடித்தனர். இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 160 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ அதிரடியாக ஆட முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவர்களில் 131 ரன்களை சேர்த்தது. பின்பு 15 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 161 ரன்களை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் 38 பந்துகளில் 67 ரன்களை அடித்தார். பேர்ஸ்டோ ஆட்டமிழக்காமல் 43 பந்தில் 80 ரன்களை அடித்து வெற்றியை உறுதி செய்தார். கலீல் அஹமது ஆட்டநாயகனாக தேர்வானார்.

Bairstow

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறியதாவது : இந்த மைதானத்தில் 160 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான ரன்களே. பேர்ஸ்டோ மற்றும் வார்னர் சிறப்பாக ஆடினார்கள் எங்களது பீல்டிங் மோசமாக இருந்தது. பேர்ஸ்டோ கேட்சை நழுவ விட்டதும் அவர் பேட்டிங்கில் பொலந்து தள்ளினார். ஒருவேளை அவரது விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்து இருக்கும்.

Bairstow

பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசினார்கள். ஆனால், பீல்டிங் இன்னும் முன்னேற வேண்டி உள்ளது. குல்தீப் யாதவிற்கு கடந்த போட்டி சிறப்பாக அமையவில்லை. அவருக்கு ஒரு சிறிய இடைவெளி தேவை அவர் மீண்டும் சிறப்பாக அணிக்கு திரும்புவார் என்றும், அடுத்த போட்டியில் இருந்து கொல்கத்தா அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என்றும் தினேஷ் கார்த்திக் கூறினார்.

Advertisement