Dinesh Karthik : பந்து இப்படி இருந்தால் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வார்கள். தோல்விக்கு இதுவே காரணம் – கார்த்திக் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமை

karthik
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 43 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

Smith

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 97 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 176ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி இளம் வீரர் ரியான் பராக் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ரியான் பராக் 31 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். மேலும், ஆர்ச்சர் 12 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 27 ரன்களை குவித்தார். 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் வீரர் வருண் ஆரோன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Riyan

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறியதாவது : இந்த தோல்வி சிறிய ஏமாற்றத்தை அளிக்கிறது. நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்றே நினைத்தேன். ஆனால், இன்று எங்களது வெற்றிக்கான நாள் இல்லை. நான் வெற்றி பெறும்போது எப்போதும் மகிழ்ச்சியாக உணருகிறேன் எறு கூறுவேன். அதேபோல்தான் இப்போதும் தோல்வி அடையும்போது வாவ் என்று இருக்கிறது. ஏனென்றால் இறுதி ஓவர் வரை ஆட்டம் சென்றிருக்கிறது.

Archer

கடைசி ஓவரின் முதல் எட்ஜ் எதுவுமே செய்ய முடியாது. அடுத்த ஷாட் அருமையான ஷாட். இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தை அளிக்க முடியாது. ஈரமான பந்தில் இவ்வளவு சிறப்பாக வீசியதே அருமையான ஒன்றாகும். நாங்கள் போராடிய விதம் அருமையாக இருந்தாலும் முடிவு வருத்தமளிக்கிறது. தோற்றாலும் வீரர்களிடம் உள்ள சூழ்நிலையை மாற்ற விரும்பவில்லை என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

Advertisement