Dinesh Karthik : மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு எந்த சாக்கு போக்குகளையும் கூற விரும்பவில்லை – கார்த்திக் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 56 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தினேஷ் கார்த்திக்

karthik
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 56 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

Karthik

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக உத்தப்பா 41 ரன்களும், லின் 40 ரன்களும் எடுத்தனர். மலிங்கா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களுக்கு 35 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

அதன்பின் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 16.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களையும் குவித்தனர். ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Rohith

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறியதாவது : முதல் 6 ஓவர்கள் எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அதன்பிறகு எங்களுக்கு எங்களுக்கு ஆதிக்கம் செலுத்த வாய்ப்பே கிடைக்கவில்லை. நாங்கள் பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் சுத்தமாக பேட்டிங்க்கு சாதகமாக அமையவில்லை. மும்பை அணி பந்துவீச்சாளர்கள் இந்த தன்மையை புரிந்து சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Hardik

பனிப்பொழிவு இரண்டாவது பேட்டிங் செய்யும்போது இருந்ததால் அது மும்பை அணிக்கு பேட்டிங்க்கு சாதகமாக அமைந்தது. ஆனால், இதனை ஒரு சாக்காக நான் கூறவிரும்பவில்லை. ரசல் பேட்டிங் ஆர்டரில் முன்கூட்டியே இறக்கிவிட்டோம் ஆனால்,அவர் முதல் பந்தில் அவுட் ஆனார். இருப்பினும் எல்லா போட்டிகளிலும் அவர் மட்டுமே நன்றாக ஆடவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரி இல்லை. அடுத்த வருடம் பலமாக திரும்பி வருவோம் என்று கார்த்திக் கூறினார்.

Advertisement