முதல் போட்டியிலே தோற்றதால் அடுத்த போட்டியில் நிச்சயம் இந்த மாற்றம் இருக்கும் – தினேஷ் கார்த்திக் அதிரடி

Karthik
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது.

kkrvsmi

- Advertisement -

அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 54 பந்துகளில் 80 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 47 ரன்களும் குவித்தனர். பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பாக பேட் கம்மின்ஸ் 33 ரன்களும் தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் குவித்தனர்.

இந்த போட்டியில் மும்பை அணியை சேர்ந்த பந்துவீச்சாளர்கள் நால்வரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகனாக 80 ரன் அடித்த ரோகித் சர்மா தேர்வானார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து மும்பை அணிக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில் : பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் இன்னும் சில பகுதிகளை நாங்கள் மேம்படுத்தி ஆகவேண்டும்.

நேர்மையாக சொல்லப்போனால் இந்த நாள் எங்களுக்கு மோசமாக அமைந்தது. வீரர்கள் அனைவரும் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்திருப்பார்கள். கம்மின்ஸ் மற்றும் மோர்கன் ஆகியோர் இப்போது தான் குவாரன்டைன் நாட்களை முடித்திருக்கிறார்கள் இதனால் நேரடியாக விளையாடுவது என்பது அவர்களுக்கு சற்று கடினமாக தான் இருக்கும். இங்குள்ள வெப்பத்திலும் சூழ்நிலையிலும் விளையாடுவது சிறிது கடினம்தான்.

boult

புள்ளிவிவரங்களை நான் அலச விரும்பவில்லை மொத்தத்தில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். துவக்க வீரர்களின் இடம் குறித்து இதுவரை நான் பயிற்சியாளருடன் விவாதிக்கவில்லை. இருப்பினும் அடுத்த போட்டியில் இது குறித்து உங்களுக்கு தெரியப்பேன் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்த போட்டியில் நிச்சயம் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டரில் சில மாற்றங்கள் நிச்சயம் நிகழும் என்று தெரிகிறது.

Advertisement