KKR vs DC : இவர் அணியில் இல்லாததே தோல்விக்கு காரணமாக அமைந்தது – கார்த்திக் வருத்தம்

ஐ.பி.எல் தொடரின் 26 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும்

Karthik
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 26 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Iyer

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி துவக்க வீரர்களாக இங்கிலாந்து அணியை சேர்ந்த டென்லி அறிமுக வீரராக களமிறங்கினார். அவருடன் சுபமான் கில் களமிறங்கினார்.

அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கில் 39 பந்தில் 65 ரன்களும், ரசல் 21 பந்தில் 45 ரன்களும் குவித்தனர். இதனால் டெல்லி அணிக்கு 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.

Denly

பிறகு ஆடிய டெல்லி அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக தவான் 63 பந்தில் 97 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். மேலும், ஆட்டநாயகன் விருதினையும் தட்டிசென்றார்.

- Advertisement -

Dhawan

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் : இந்த மைதானத்தில் இந்த ரன்கள் வெற்றிக்கு போதுமானது கிடையாது. இன்னும் 10-15 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச வில்லை. மேலும், க்றிஸ் லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் அணியில் இல்லாதது அணிக்கு நம்மை கிடையாது.

Narine

கில் தனது வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை குவித்தார். டென்லி அதிர்ச்சி அளிக்கும்படி துவக்கம் கொடுத்தாலும் அடுத்த போட்டியில் மீண்டு எழுந்து சிறப்பாக விளையாடுவார் என்றும் இந்த மைதானத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த சற்று கடினமாக இருந்ததாகவும் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

Advertisement