கொல்கத்தா அணியில் இருந்து இவரை கனத்த மனதோடு வேறுவழியின்றி நீக்கினோம் – தினேஷ் கார்த்திக் உருக்கம்

karthik
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Dubai

- Advertisement -

இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தங்களது அணி குறித்து சில விடயங்களை வலைதளத்தில் ஒரு வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் இந்த வருட வீரர்களின் தேர்வு மற்றும் வீரர்களின் ஏலம் ஆகியவற்றை குறித்து தனது கருத்தை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அதன்படி துவக்க வீரரான கிறிஸ் லின் கடந்த சில ஆண்டுகளாக அதிரடியான துவக்கத்தை கொடுத்து வந்தார். அவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல போட்டிகளில் அவர் கொல்கத்தா அணிக்காக சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளார். அவரை கனத்த இதயத்துடன் தான் அணியில் இருந்து விடுவித்தோம்.

chris

அவர் ஒரு அபாரமான வீரர் அவரை இழப்பது ஒரு பெரிய இழப்புதான். இருப்பினும் ஏல நடைமுறையில் நாம் சில வீரர்களை அணியில் இருந்து விடுவித்து தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் எழுகின்றது. அதற்கு ஏற்றார் போல் அணியிலிருந்து கிறிஸ் லின் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அணியில் இணைந்து இருப்பதால் பேட்டிங் ஆர்டரில் அது ஒரு புது தெம்பை கொடுத்துள்ளது. மேலும் அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விடயம் இருக்கிறது. ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து தான் தற்போது சார்பியன் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement