சத்தியமா சொல்றேன் அவர் இருந்திருந்தா தெ.ஆ அணியை சாய்ச்சி இருப்பாரு – தினேஷ் கார்த்திக் கருத்து

Dinesh-Karthik
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சுரியன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது கே.எல் ராகுலின் சதம் காரணமாக 245 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் ராகுலை தவிர்த்து வேறு எந்த வீரரும் அணியின் ரன் குவிப்பை அதிகப்படுத்த கை கொடுக்கவில்லை.

ஆனால் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் தென்னாபிரிக்கா அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தி வருகிறது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழந்து 256 ரன்கள் எடுத்திருந்த வேளையில் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின் உணவு இடைவெளி வரை 392 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

மேலும் தற்போதே இந்திய அணியை விட தென்னாப்பிரிக்க அணி 147 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் தென் ஆப்பிரிக்க அணியே இந்த போட்டியில் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி இப்படி ஒரு சரிவை சந்திப்பதற்கு காரணம் இந்திய அணியின் சற்று சுமாரான பந்துவீச்சு தான் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதிலும் பும்ரா மற்றும் சிராஜ் தவிர்த்து பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரது பந்துவீச்சு மோசமாக இருந்து வருவதாகவும் பலரும் வெளிப்படையாகவே தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் தற்போதைய டெஸ்ட் அணி முகமது ஷமியை மிகவும் தவற விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இதுபோன்ற வேகத்திற்கு சாதகமாக இருக்கும் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் சீம் பிடித்து பந்துவீசும் முகமது ஷமி இருந்திருந்தால் அசத்தியிருப்பார். சத்தியமாக சொல்கிறேன் நிச்சயம் இந்த போட்டியில் அவர் விளையாடியிருந்தால் விரைவாகவே சில விக்கெட்டுகளை வீழ்த்தி அற்புதமான துவக்கத்தை அளித்து இருப்பார்.

இதையும் படிங்க : எல்கர் 185 ரன்ஸ்.. அவ்ளோ தான் முடிஞ்ச்சு.. இந்திய அணியின் ஆட்டதால் ஹர்ஷா போக்லே கவலை

இந்திய அணி தற்போதைய நிலையில் அவரை மிகவும் தவற விடுவதாகவே நினைக்கிறேன். அதே வேளையில் பும்ரா மற்றும் சிராஜ் சிறப்பாக வீசுகிறார்கள். இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் பேட்ஸ்மேன்கள் தவறு செய்வதற்காக காத்திருந்து ரன்களை அதிகமாக கொடுப்பதாகவே தான் கருதுவதாக தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement