இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை குவிக்கப்போவது இவர்தான் – தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ள நிலையில் இந்த டி20 தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது ? சிறப்பாக விளையாடப்போகும் வீரர்கள் யார் ? எந்த அணி ஆதிக்கம் செலுத்தும் ? எந்த அணிகள் இறுதி போட்டிக்கு செல்லும் ? என்று பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த டி20 உலகக் கோப்பை தொடர் குறித்தான கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வருகின்றனர்.

Cup

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வீரரான தினேஷ் கார்த்திக் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி அதிக ரன்களை குவிக்கப்போகும் வீரர் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மா அல்லது ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் இவர்கள் இருவரில் ஒருவர்தான் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவிப்பார்கள். ஏனெனில் இரண்டு பேருமே அந்தந்த அணிகளுக்காக துவக்க வீரர்களாக களம் இறங்குவதால் அதிக நேரம் நின்று விளையாடுவார்கள்.

Rohith

அதுமட்டுமின்றி ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்கள் இருவரிடமும் இருப்பதனால் நிச்சயம் அதிக ரன்களை இவர்கள் அடிப்பார்கள் என்று கூறினார். அதுமட்டுமின்றி மேலும் தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் : உலக கோப்பை தொடர் என்று வந்து விட்டால் ரோகித் சர்மாவை பிரித்து பார்க்க முடியாது.

rohith 1

எப்போதுமே உலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் ரன்மழை பொழிய கூடியவர். அதனால் நிச்சயம் இந்த உலக கோப்பை தொடரிலும் சிறப்பான தொடக்கத்தை அவரால் தர முடியும். ரோகித் சர்மாவிற்கு துணை நின்று இந்திய வீரர்கள் செயல்பட்டால் நிச்சயம் இந்திய அணி பல வெற்றிகளை குவிக்கும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement