டி20 உலகக்கோப்பை தொடரில் கலக்கப்போகும் 3 வீரர்கள் இவர்கள்தான் – தினேஷ் கார்த்திக் கணிப்பு

Karthik
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கே நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது. மேலும் அதற்கான அட்டவணையும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரானது நிச்சயம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடரில் வெற்றி பெற்று டி20 சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற அனைத்து அணிகளும் போராடும் என்பதால் ரசிகர்களுக்கு இந்த தொடர் ஒரு விருந்தாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Cup

- Advertisement -

இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தயாராகி வரும் வேளையில் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர்கள் ஜொலிப்பார்கள் என்பது குறித்து தினேஷ் கார்த்திக் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதன்படி வரும் டி20 உலக கோப்பையில் 3 வீரர்கள் நிச்சயம் இந்த தொடர் முழுவதும் கவனிக்கப்பட வேண்டிய வீரர்களாக இருப்பார்கள் என்று அவர் தெரிவு செய்துள்ளார். அதில் முதலாவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கலஸ் பூரன், இரண்டாவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், மூன்றாவதாக இந்திய ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா ஆகியோரை தெரிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை பூரான் ஒரு ஸ்பெஷலான பிளேயர். அவரது கிரிக்கெட் கரியர் முடியும்போது நிச்சயம் டி20 கிரிக்கெட்டில் ஒரு மகத்தான வீரராக இருப்பார். அவரது பேட் ஸ்விங் அபாரமாக உள்ளது. நிச்சயம் இந்த உலக கோப்பை தொடரில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியை முன்னுக்கு கொண்டு செல்வார் என்று கார்த்திக் கூறினார். மேலும் ஸ்டார்க் குறித்து கூறுகையில் :

Pooran

ஸ்டார்க் தான் தற்போது ஆஸ்திரேலியாவின் பலம். போட்டியின் துவக்கத்தில் இரண்டு ஓவர்கள், இறுதியில் இரண்டு ஓவர்கள் என தனது ரிதத்தை பிடித்து விட்டால் நிச்சயம் எப்பேர்ப்பட்ட வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்யும் வல்லமை கொண்டவர் என்று கூறியுள்ளார். மூன்றாவதாக ஹார்டிக் பாண்டியா குறித்து கூறுகையில் : பெரிய தொடர்களை வெல்ல வேண்டும் எனில் நிச்சயம் ஹார்டிக் பாண்டியா போன்ற வீரர் அணிக்கு தேவை.

pandya 1

அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். அதுமட்டுமின்றி பேட்டிங்கில் ரன் ரேட்டை உயர்த்தும் ஒரு வீரராகவும் ஹர்திக் பாண்டியா திகழ்கிறார். அவர் எந்த பவுலரையும் மைதானத்தின் எந்த ஒரு மூலைக்கும் அடிக்கக்கூடிய ஒரு வீரர். எனவே நிச்சயம் இவர்கள் மூவரும் இந்த டி20 உலககோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement