நேற்று நடந்த கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரேயானா போட்டியில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் உத்தப்பா ஆகியோர் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :
— Dhoni Fan (@WastingBalls) March 28, 2019
இதற்கு காரணமாக அமைந்தது கொல்கத்தா வீரரின் பீல்டிங். பந்தை பிடித்த கொல்கத்தா வீரர் அந்த பந்தை ரஸ்ஸலை நோக்கி வீச அதனை கவனிக்காத ரஸ்ஸல் பந்தை விட்டார் அந்த பந்து பவுண்டரிக்கு சென்றது. உடனே நடுவர் பைஸ் 4 ரன்களை வழங்கினார். இதனை எதிர்த்து கார்த்திக் மற்றும் உத்தப்பா நடுவரிடம் சண்டைக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு 8 மணிக்கு நடந்த 6 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது பஞ்சாப் அணி அதனால் கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.
அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனால் 219 ரன்கள் இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 190 ரன்களை மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.