CSK vs SRH : டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தார் தல தோனி. தாக்கூர் பதிலாக ஹர்பஜன் விளையாடுகிறார் – காரணம் இதுதான்

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், வில்லியம்சன் தலைமை

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.

Williamson

- Advertisement -

இந்த போட்டியுடன் சன் ரைசர்ஸ் அணிவீரர்களான பேர்ஸ்டோ மற்றும் வார்னர் ஆகியோர் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் விளையாட தாயகம் திரும்புவதால் இந்த போட்டியை வெற்றியுடன் முடிக்க சன் ரைசர்ஸ் அணி தயாராகி வருகிறது. அதேபோன்று கடந்த இரு போட்டியில் தோல்வி அடைந்த சென்னை அணி தோல்வியில் இருந்து மீண்டு பிளேஆப் வாய்ப்பினை உறுதி செய்யும் நோக்கோடு விளையாட உள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. பின்னர் இந்த போட்டி மற்றும் மைதானம் குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியதாவது : சென்னையில் எப்போதும் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும். இந்த மைதானம் அதிக அளவு பந்துவீச்சுக்கு முதலில் ஒத்துழைக்கும். மேலும், நாங்கள் இங்கு பலமுறை விளையாடி உள்ளதால் முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தேன்.

Harbhajan

இந்த் போட்டியில் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் விளையாடுகிறார். ஏனெனில், சென்னை மைதானம் அதிக அளவு சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். மேலும், இதுபோன்ற மைதானங்களில் ஹர்பஜன் சிறப்பாக செயல்படுவார் எனவே தாக்கூரை நீக்கிவிட்டு ஹர்பஜனை சேர்த்தேன் என்று தோனி கூறினார்.

Advertisement