சி.எஸ்.கே அணிக்காக தோனி கட்டாயம் அவர் இன்னும் இத்தனை ஆண்டுகள் விளையாடுவார் – முக்கிய நிர்வாகி அதிரடி

CSK-Owner
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். 2008 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.5 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் எடுத்தது. அப்போதிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை கொடிகட்டி பறந்து வருகின்றது. இடையில் இரண்டு ஆண்டுகள் புனே அணிக்காக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhoni

- Advertisement -

தற்போது வரை மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கோப்பையை வெல்ல வைத்துள்ளார். இதுவரை நடந்த அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் தனது அணியை பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது 39 வயதாகிவிட்டதால் இந்திய அணியில் இருந்து ஐபிஎல் அணிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிசுவநாதன் தோனி தொடர்ந்து விளையாடுவது குறித்து தற்போது தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

dhoni

எங்களுக்கு எப்பவும் கேப்டன் தோனிதான். அடுத்த ஆண்டு கண்டிப்பாக தோனிதான் கேப்டனாக தொடர்வார். சொல்லப்போனால் அடுத்த ஆண்டு மட்டுமின்றி அதற்கடுத்த 2022 ஆம் ஆண்டும் அவர்தான் கேப்டனாக இருப்பார். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை என்று கூறியுள்ளார் காசி விஸ்வநாதன்.

msdhoni

மேலும் தோனி ராஞ்சியில் பயிற்சியினை மேற்கொண்டதை செய்தி வாயிலாக அறிந்தேன். அவரது திறமை மீது எங்களுக்கு எந்தவித சந்தகமும் இல்லை. தான் என்ன செய்யவேண்டும் என்பது தோனிக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 15ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை பயிற்சி செய்ய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement