MS Dhoni : தோனி இன்றைய போட்டியில் பங்கேற்காததன் காரணம் – ரெய்னா

ஐ.பி.எல் தொடரின் 44 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் துவங்கியது. இந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் சர்மா

Raina-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 44 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் துவங்கியது. இந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன.

Raina

இந்த போட்டியில் சென்னை அணியின் சார்பாக கேப்டனாக சுரேஷ் ரெய்னா வந்திருந்தார். எனவே இன்றைய போட்டியில் தோனி இல்லை என்பது தெளிவாக உறுதியானது. பின்பு டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரெய்னா முதலில் பந்துவீச்சினை தேர்வுசெய்தார். பின்பு அணியின் மாற்றங்கள் குறித்து ரெய்னா பேசினார்.

- Advertisement -

அதில் ரெய்னா கூறியதாவது : இன்றைய போட்டியில் தோனி மற்றும் ஜடேஜா ஆடவில்லை. தோனி மற்றும் ஜடேஜா இருவரும் காய்ச்சல் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. மேலும், இருவரும் அணி பேருந்தில் மைதானத்திற்கு கூட வரவில்லை. மற்றொரு துவக்க வீரரான டுபிளிஸ்சிஸ் இன்றைய போட்டியில் ஆடவில்லை.

jadeja

இன்றைய போட்டியில் தொடரில் முதல் முறையாக முரளி விஜய் ஆடுகிறார். ஜடேஜாவிற்கு பதிலாக சான்ட்னர் ஆடுகிறார் என்று ரெய்னா கூறினார். தோனி இல்லாத சென்னை அணி சாதிக்குமா என்று பொருத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

Advertisement