கோலியை சென்னையில் கண்டதும் தல தோனி என்ன செய்தார் தெரியுமா ?

dhoni
- Advertisement -

இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி கொண்டே வருகிறது.

VK and MS

- Advertisement -

நாளை மாலை துவங்க உள்ள இந்த போட்டிக்காக பெங்களூரு அணி வீரர்கள் நேற்று பெங்களுருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த பெங்களூரு அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை வீரர்களுடன் இணைந்து பயிற்சியினை மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

பயிற்சியின் போது கோலியை சந்தித்த தோனி அவரிடம் சென்று கட்டி அணைத்து வரவேற்றார். இந்த வரவேற்பு புகைப்படத்தினை சென்னை அணி தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த புகைப்படம் :

நாளை மாலை துவங்க உள்ள இந்த முதல் போட்டியில் தோனி மற்றும் கோலி எதிரெதிர் அணி கேப்டனாக களத்தில் பலபரிச்சை செய்ய உள்ளனர். இந்த வருடமும் கோப்பையை கைப்பற்ற சென்னை அணி தீவிரம் காட்டும் என்று நம்பப்படுகிறது.

Advertisement