பரபரப்பான இந்த போட்டியில் கிடைத்த த்ரில் வெற்றிக்கு காரணம் இதுதான் – தோனி பேட்டி

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்ய முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் என்ற பெரிய ரன் குவிப்பை வழங்கியது. துவக்க வீரராக டூபிளெஸ்ஸிஸ் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ருதுராஜ் 64 ரன்கள் எடுத்து அசத்தினார். இவர்கள் இருவரின் அதிரடி காரணமாக சென்னை அணி 220 என்ற பிரமாண்ட ரன்குவிப்பை வழங்கியது.

cskvskkr

- Advertisement -

அதன்பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி பவர் பிளே 6 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான துவக்கத்தை கண்டது. அதன் பின்னர் போட்டி முடிந்தது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரசல் ஆகியோர் இணைந்து சென்னை அணிக்கு பயத்தை காட்டினர். இருவரும் சரமாரியாக சிஎஸ்கே அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து ரன்களை சேர்த்தனர். ஒருகட்டத்தில் 11 ஓவர்களில் 112 ரன்கள் வந்த நிலையில் ரசல் ஆட்டமிழந்தும் வெளியேறினார்.

அதன்பின்னர் சென்னை அணி எளிதாக வெற்றியை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த வேலையில் கம்மின்ஸ் 34 பந்துகளில் 66 ரன்கள் குவிக்க இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். அவர் இருக்கும் வரை கொல்கத்தா அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி இரண்டு வீரர்கள் அவரால் ரன் அவுட் ஆகி வெளியேறியதால் கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

cummins

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேட்டியளித்த தோனி கூறுகையில் : இந்த போட்டியின் முக்கிய கட்டத்தில் 16வது ஓவரில் இருந்து போட்டி பாஸ்ட் பவுலர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையே நடந்த போட்டியாகவே இருந்தது. அதனால் வித்தியாசமான பீல்டிங் அமைப்பை நம்மால் அமைக்க முடியாது. போட்டி அதிரடியாக சென்று கொண்டிருந்ததால் எந்த அணி சிறிது சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அணி வெற்றி பெறும் என்ற நிலைமை வந்தது.

cummins 1

இருப்பினும் சரியான நேரத்தில் நாங்கள் விக்கெட்டை எடுத்து வெற்றி பெற்றுள்ளோம் எங்கள் அணியில் இன்றைய போட்டியில் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. ருதுராஜ் கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் எனவே அவருக்கு வாய்ப்பு வழங்குவது அவசியமான ஒன்று. இன்றைய போட்டிக்கு முன் நான் அவரிடம் பேசியபோது அவர் கண்களில் பதில் இருந்தது. அதேபோன்று அவர் சிறப்பாக விளையாடினார் என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement