MS Dhoni : ரசிகர்கள் என்னிடம் இருந்து இதையே எதிர்பார்க்கிறார்கள். அதனால் என்னால் சிறப்பாக ஆடமுடிகிறது – தோனி பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ரெய்னா 59 ரன்களை குவித்தார். இதனால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆடிய டெல்லி 16.2 அணி ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆடி 44 ரன்களை குவித்தார். சென்னை அணி சார்பாக இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசி 3.2 ஓவர்களில் 12 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிரடியாக விளையாடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Tahir

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய தோனி கூறியதாவது : இந்த போட்டியில் நான் விளையாடும்போது தோனி, தோனி என்று ஆர்ப்பரித்து கொண்டிருந்தனர். அவர்களின் வேண்டுகோளை நான் நிறைவேற்ற வேண்டும் அதனால் நான் பந்தினை நன்றாக பார்த்தேன் பிறகு பலமாக அடித்தேன். அதனால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது. ராயுடுவுக்கு பந்தினை விலாச போதிய வேகம் கிடைக்கவில்லை. 20 ஆவது ஓவரில் முதல் பந்தில் இருந்தே பேட்டை சுற்ற இருந்தேன். அதனால் அந்த ஓவரில் நல்ல ரன்கள் வந்தது.

Tahir 1

மேலும், இந்த மைதானத்தில் 170-180 ரன்கள் வரை எடுத்தால் வெற்றி உறுதி. ஆரம்பத்தில் ஹர்பஜன் பந்து திரும்பவில்லை. பிறகு நன்றாக திரும்பியது. எங்களது அணியின் ஸ்பின்னர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசினார்கள் அவர்களின் சிறப்பான பந்துவீச்சு டெல்லி அணியை கட்டுப்படுத்தி அணிக்கு வெற்றி தேடித்தந்தது என்று தோனி கூறினார்.

Advertisement