CSK vs KXIP : என் இடத்தில் இருந்தால் அஸ்வினும் இதைத்தான் செய்திருப்பார் – தோனி

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 18ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

Ashwin

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. டாஸ் வென்ற பிறகு மைதானம் குறித்து பேசிய தோனி : எப்போதும் சென்னை மைதானம் எனக்கு நெருக்கமான ஒன்று.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய காரணம் மைதானம் கொஞ்சம் கடினமாக இருப்பதால் முதலில் பேட்டிங் செய்வதே சிறந்தது. மேலும், இந்த போட்டியில் அணியில் பல மாற்றங்கள் உள்ளன. பிராவோ ஆடவில்லை அவருக்கு பதிலாக டுபிலிஸிஸ் ஆடுகிறார். அதேபோன்று ஹர்பஜன் சிங் இந்த போட்டியில் ஆடுகிறார்.

Dhoni 1

சென்ற போட்டியில் நடந்த பீல்டிங் தவறுகள் இந்த போட்டியில் நடக்காமல் இருக்க அனைவரும் பயிற்சி செய்து தயாராகி உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிக அளவில் உள்ளது.

மேலும், ஒருவேளை அஸ்வின் டாஸ் ஜெயித்து இருந்தாலும் முதலில் பேட்டிங் செய்யவே நினைத்திருப்பார் என்று நினைக்கிறன். பிறகு பேசிய அஸ்வின் தோனி கூறியது போலவே அஸ்வினும் அதனையே தான் கூறினார்.

Advertisement