இவருக்கு கொடுத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். நிச்சயம் இவர் திறமையான வீரர் – தோனி வெளிப்படை

Dhoni 1
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 49 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரானா 61 பந்துகளில் 87 ரன்களையும், சுப்மான் கில் 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 21 ரன் குவிக்க கொல்கத்தா அணி 172 ரன்களை குவித்தது.

அதன் பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் 53 பந்துகளில் 72 ரன்களையும், அம்பத்தி ராயுடு 38 ரன்களும் குவித்தனர். இறுதிநேரத்தில் ஜடேஜா 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரி என 31 ரன்களை அடித்து அசத்தினார். ருதுராஜ் ஆட்டநாயகனாக தேர்வானார்.

ruturaj 1

இந்நிலையில் போட்டி முடிந்து ருதுராஜின் சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய தோனி கூறுகையில் : கோவிட் பாதிப்பிற்கு பிறகு திரும்பி வந்த கெய்க்வாட் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த தொடரின் இளம் வீரர்களில் இவரும் ஒரு நல்ல திறமையுள்ள வீரராக வலம் வருகிறார். ஒரு பேட்ஸ்மேனாக அவர்கள் விளையாடும்போது சூழ்நிலைகளை அறிந்து சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் போட்டியில் ஆரம்பம் முதலே அடிக்கவேண்டும் என்று நினைத்து அவர் ஆட்டமிழந்து சென்றார்.

ஏனெனில் அது அடிக்க வேண்டிய தருணம் அதனால் அந்த ஒரு பந்து அவருக்கு போதாது என நினைத்தேன். அதன்பிறகு அவருக்கு வாய்ப்புகளை கொடுத்தோம். அதன்படி அவரும் சிறப்பாக விளையாடி தனது வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இந்த தொடரில் இவரது சேர்க்கை மிக முக்கியமானது என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால் இனிவரும் போட்டிகளிலும் அவரின் இடம் உறுதியாகியுள்ளது.

Advertisement