MS Dhoni : நல்லவேளை எங்களுக்கு இந்த வாய்ப்பு உள்ளது. அதனை பயன்படுத்தி கொள்வோம் – தோனி பேட்டி

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும்

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் பிளேஆப் குவாலிபயர் 1 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன.

Rohith

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை 131 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ராயுடு 42 ரன்களும், தோனி 37 ரன்களை குவித்தனர்.ராகுல் சாகர் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்/

பிறகு 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச்சென்றார்.

Suryakumar

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தோனி கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. சொந்த மைதானத்தில் 7 முதல் 8 போட்டிகள் வரை ஆடி இருக்கும்போது மைதானத்தை பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆனால், நாங்கள் இந்த மைதானத்தில் தன்மையை சரியாக கணிக்கவில்லை. மேலும் பந்து நின்று வருகிறதா ? இல்லை வேகமாக வருகிறதா ? என்று கணிக்கும் முன் ஓவர்கள் கடந்து விட்டன.

bumrah

மும்பை அணி சிறப்பாக விளையாடியது. அவர்கள் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பான வீரர்கள் ஆவார்கள். மேலும், நேற்றைய போட்டியில் பந்துவீச்சு மட்டுமின்றி சில கேட்சுகளையும் கோட்டை விட்டோம். பேட்டிங்கில் இன்னும் அதிக முன்னேற்றம் தேவை. இருப்பினும் நாங்கள் முதல் 2 இடங்களுள் இருந்ததால் எங்களுக்கு இறுதிபோட்டிக்கு செல்ல இன்னொரு வாய்ப்பு உள்ளது என்று தோனிகூறினார்.

Advertisement