பல வாய்ப்புகளை நாங்களே கொடுத்துவிட்டோம். இவர் ஒருவரே தோல்விக்கு காரணம் – தோனி ஓபன் டாக்

Dhoni 2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 34 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது.

Iyer

- Advertisement -

அதிகபட்சமாக டூபிளெஸ்ஸிஸ் 58 ரன்களும், ராயுடு 45 ரன்களும் குவித்தனர். அதன்பிறகு 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

58 பந்துகளைச் சந்தித்த ஷிகார் தவான் 101 ரன்களுடனும், 5 பந்துகளை சந்தித்த அக்சர் பட்டேல் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டார்.

Dhawan 1

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேட்டியளித்த தோனி கூறுகையில் : இந்த போட்டியில் ஷிகர் தவான் விக்கெட் மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் நாங்கள் அவருக்கு பல வாய்ப்புகளை கொடுத்தோம். அவர் கொடுத்த எளிதான காட்சிகளை தவற விட்டோம் இது போன்று அவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது அவர் ஸ்கோர் போர்டை தனது அதிரடியால் உயர்த்திக் கொண்டே இருப்பார்.அவர் எப்போதும் ரன் எடுக்க வாய்ப்புகளை எடுத்துக் கொண்டே இருப்பார்.

- Advertisement -

அவர் களத்தில் இருந்தால் ஸ்ட்ரைக் ரேட் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆடுவார். அவரது விக்கெட்டை இந்த போட்டியில் முக்கிய விக்கெட்டாக பார்க்கப்பட்டது. முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்ஸிலும் பிச்சின் மாறுதல்கள் இரண்டாவது இன்னிங்சில் அவர்களுக்கு உதவியது. பந்து ஸ்லோவாக வந்ததால் அவர்களால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிந்தது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றிக்கு முக்கிய காரணம் ஷிகர் தவானின் சிறப்பான பேட்டிங் என்று தோனி கூறினார்.

Dhawan

மேலும் அவர் மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் சிறப்பான சப்போர்ட் கொடுத்தார். அவரே மொத்த வெற்றியை வாய்ப்பையும் பறித்து விட்டார் என்று தோனி கூறினார். மேலும் மைதானத்தில் இருந்த தன்மை அவர்களுக்கு உதவியது. இன்னும் 10 முதல் 20 ரன்கள் அடித்து இருந்தால் இன்னும் எங்களுக்கு உதவி இருந்த்திருக்கும். இருப்பினும் இந்த போட்டி எங்களுக்கு ஒரு அனுபவத்தை அளித்துள்ளது என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement