MS Dhoni : நிறைய தவறுகளை செய்துவிட்டோம். தோல்விக்கு இதுவே காரணம் – தோனி வருத்தம்

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித்

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக வாட்சன் 80 ரன்களைக் குவித்தார். பும்ரா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

Watson

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தோனி கூறியதாவது : ஒரு அணியாக இந்த தொடர் சென்னை அணிக்கு சிறப்பாக இருந்தது. ஆனால், இந்த தொடரில் நாங்கள் கடந்த ஆண்டுகளைப் போல மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு வரவில்லை. மிடில் ஓவர்களில் எங்கள் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. இன்று இரண்டு அணிகளும் நிறைய தவறுகளை செய்தோம். ஆனால் எங்களை விட மும்பை அணி குறைவான தவறுகளை செய்ததால் வெற்றி பெற்றார்கள். எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார் இந்த மைதானத்தில் 150 ரன்கள் என்பது கண்டிப்பாக எட்டக்கூடிய இலக்கை தான்.

Watson2

மேலும், எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ அப்போதெல்லாம் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தனர். இதுபோன்ற குறைவான இலக்கு கொண்டு இறுதிப்போட்டியில் எதிரணியை சுருட்டுவது என்பது கடினம். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் அதனை சிறப்பாக செய்தனர். பேட்டிங்கில் சற்று சுமாராக செயல்பட்டு ஒரு ரன்னில் தோற்றது வருத்தமளிக்கிறது.இந்த போட்டியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களில் காரணம் என்பதால் அடுத்த தொடரில் கண்டிப்பாக அவர்கள் ரன்களை குவிப்பார்கள் என்று தோனி கூறினார்

Advertisement