செய்ஞ்ச தவறையே மீண்டும் மீண்டும் செய்கிறோம். அதுவே தொடர் தோல்விகளுக்கு காரணம் – தோனி வேதனை

Dhoni 2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 164 ரன்களைக் குவித்தது.

Garg

- Advertisement -

அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரரான பிரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்களையும் அபிஷேக் வர்மா 24 பந்துகளில் 31 ரன்கள் அடித்து அசத்தினார். பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 50 ரன்களையும், தோனி 47 ரன்களையும் அடித்தனர்.

இதன் காரணமாக சென்னை அணி 7 ரன் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. பிரியம் கார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் அடைந்த தோல்வி சென்னை அணிக்கு தொடர்ச்சியான 3 ஆவது தோல்வியாகும். இந்த தோல்வி மீண்டும் சென்னை ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை அளித்துள்ளது.

dhoni 1

இந்நிலையில் போட்டியின் தோல்விக்குப் பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியதாவது : என்னால் பல பந்துகளை சரியாக மிடில் பேட்டில் அடிக்க முடியவில்லை. பந்தை பலமாகவே அடிக்க நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் மைதானம் ஸ்லோவாக இருந்ததால் எனக்கு சரியாக பந்து கனெக்ட் ஆகவில்லை. அதனால் சிறிது நேரம் எடுத்து ஆடினேன் என்று தோனி கூறினார்.

srh

நாங்கள் நிறைய வி‌ஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. கேட்ச்களை தவறு விடுவது, நோ-பால் வீசுவது ஆகியவை நல்லது அல்ல. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்தக் கூடியவைதான்.
நாங்கள் அதே தவறை மீண்டும் செய்கிறோம். 16-வது ஓவருக்கு பிறகு 2 ஓவர் மோசமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக ஆட்டத்தில் இன்னும் மேம்பட வேண்டும். இவற்றையெல்லாம் களைந்து அடுத்த போட்டியில் மீண்டு வருவோம் என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement