கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் – தோனி வேதனை

Dhoni 2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கணேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் திரிப்பாதி 51 பந்துகளில் 81 ரன்களை குவித்து அசத்தினார். சென்னை அணி சார்பாக பிராவோ 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் 12 வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் வாட்சன் 50 ரன்களும் அம்பத்தி ராயுடு 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதுவரை சென்னை அணி வெற்றி பெறும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதன் பிறகு வழக்கம்போல தோனி, சாம்கரன், கேதார் ஜாதவ் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்ப இறுதியில் ஜடேஜா 8 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராகுல் திரிப்பாதி தேர்வானார்.

Tripathi

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில் : மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணி வீரர்கள் 2-3 சிறப்பான ஓவர்களை வீசினார்கள். நாங்கள் பேட்டிங்கை நன்றாக செய்திருந்தாலும், 2-3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழக்கவில்லை என்றாலும் அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். முதல் ஐந்து ஆறு ஓவர்களில் நாங்கள் நிதானமாகவும் கவனமாகவும் விளையாடினோம்.

KKR

சாம் கரன் சிறப்பாக பந்து வீசினார். இன்று நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால் எங்களது பேட்ஸ்மேன்கள் இன்று பந்துவீச்சாளர்களின் உழைப்பை வீணடித்து விட்டார்கள். பேட்டியின்போது ஸ்டிரைக் ரொட்டேஷன் மிகவும் அவசியம். கடைசி சில ஓவர்களில் கூட எங்களால் பவுண்டரிகளை அடிக்க முடியவில்லை. நாங்கள் கடைசி நேரத்தில் போட்டியின் தன்மைக்கேற்ப விளையாட வில்லை என்றும் தோனி தனது வேதனையை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement