MS Dhoni : நேற்றைய போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்யாத தோனி – என்னாச்சு தோனிக்கு ?

உலககோப்பை தொடரின் 40 ஆவது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச

dhonii
- Advertisement -

உலககோப்பை தொடரின் 40 ஆவது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

Ind vs ban 1

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக ரோகித் சர்மா 104 ரன்கள், ராகுல் 77 ரன்கள் குவித்தனர்.

பிறகு 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களை மட்டுமே எடுத்தது இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

dhoni

நேற்றைய போட்டியில் வங்கதேச அணி ஆடிக்கொண்டிருக்கும் போது சில ஓவர்கள் தோனி கீப்பிங் செய்ய வரவில்லை. அவருக்கு பதிலாக பண்ட் கீப்பிங் செய்து கொண்டிருந்தார். இதற்கு காரணம் இன்னும் உறுதியாக வெளியாகவே இல்லை. இருந்தாலும் தோனிக்கு இதில் காயம் ஏற்பட்டதால் அல்லது ஓய்வுக்காக அவர் கீப்பிங் செய்யவில்லையா என தெரியவில்லை. இருப்பினும் இந்த உலக கோப்பை தொடரில் தோனியின் வழக்கமான மின்னல் வேக ஸ்டம்பிங், சாமர்த்தியமான அப்பீல் என்று தோனி இதுவரை எதுவும் செய்யவில்லை. மேலும் தோனி இல்லாத ஒரு காரணத்தால் ஒரு ஒரு ரிவியூ இந்திய அணி இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement