வீடியோ : பிராவோவின் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்திய தல தோனி – நடந்தது என்ன ?

Dhoni-2
- Advertisement -

நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சவுரவ் திவாரி 40 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். இருப்பினும் அவரால் மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இறுதியில் எவ்வளவோ போராடிய மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

Tiwari

- Advertisement -

இந்த போட்டியில் இறுதி வரை களத்தில் நின்ற திவாரி 50 ரன்கள் குவித்தாலும் அவரால் மும்பை அணிக்கு வெற்றி தேடித் தர முடியாதது சற்று வருத்தமாக அமைந்தது. அவர் ஒரு கட்டத்தில் 41 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த எளிதான கேட்ச்சை தோனி தவறவிட்டார். பைன் லெக் திசையில் சென்ற அந்த பந்தை பிடிக்க போன தோனி தான் கேட்ச்சிக்கு போகிறேன் என்று சொல்லிக் கொண்டே ஓடினார்.

இருப்பினும் அந்த கேட்சை பிராவோ பிடிக்க வந்ததால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தை குழப்பத்தினால் தோனி பந்தினை தவறவிட்டார். இதனால் கடும் விரக்தி அடைந்த தோனி பிராவோவின் மீது தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி அவரிடம் ஏதோ பேசிய படியே திரும்பி வந்தார்.

என்னதான் தோனி கேட்சை பிடிக்க பின்னோக்கி சென்று இருந்தாலும் அது பிராவோவிற்கு சென்ற எளிதான கேட்ச் தான் இதனால் பிராவோ சற்று வருத்தத்துடன் காணப்பட்டார். மும்பை அணிக்கு அப்போது 15 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இருந்ததால் அந்த கேட்ச் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே தோனி தனது அதிர்ப்தியை கோபமாக வெளிப்படுத்தி சென்றார்.

இருப்பினும் மும்பை அணி கடைசியில் அந்த இலக்கினை எட்ட முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 136 ரன்களை மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தோனி பிராவோவின் மீது கோபப்பட்ட அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement