வாட்சனோடு சேர்த்து இவரையும் அடுத்த போட்டியில் தூக்க போறேன் – அதிரடியாக அறிவித்த தல தோனி

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் குவித்தது.

cskvsmi

- Advertisement -

சென்னை அணியின் முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் சாம் கரன் மட்டும் இறுதி வரை சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு நகர்ந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் 37 பந்துகளில் 46 ரன்களும், இஷான் கிஷன் 37 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது ஆட்டநாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

ishan kishan

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய தோனி இடையில் ராயுடு குறித்தும் ஒரு சிறிய குறிப்பினை அளித்திருந்தார். அதில் இந்த போட்டியில் ராயுடு காயத்துடன் விளையாடினார். அதனால் அவர் சிறப்பாக விளையாடவில்லை அதனால் பின் வரிசையில் ஆடும் வீரர்கள் சரியாக விளையாடமுடியாமல் போனது.

- Advertisement -

இந்தப் போட்டியில் நாங்கள் எதையுமே சரியாக செய்யவில்லை. எங்கள் பக்கம் எந்த ஒரு சாதகமும் திரும்பவில்லை. முன்வரிசையில் பேட்டிங் வீரர்கள் சரியாக விளாயாடாததால் பின்வரிசையில் பேட்மேன்களுக்கு மிகுந்த அழுத்தம் ஏற்பட்டது என்றும் தோனி குறிப்பிட்டிருந்தார். ராயுடு காயம் அடைந்து இருக்கிறார் என்று தோனி கூறியிருப்பதால் நிச்சயம் அவர் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று தெளிவாகியிருக்கிறது.

Rayudu 3

அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் மறைமுகமாக தோனி சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே இந்த போட்டியில் வாட்சன் விளையாட நிலையில் அடுத்த போட்டியில் வாட்சன் மற்றும் ராயுடு ஆகிய இருவரும் விளையாடாமல் போக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement